அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் நல் இதயம் படைத்தவர், மற்றவர்களுக்குத் தொல்லையோ, துன்பமோ கொடுக்காதவர், தனக்கென அமைதியான, செம்மையான வாழ்வை அமைத்தவர், மனதின்கண் மாசில்லாதவர். அதனால் உடலைவிட்டு ஆன்மா பிரியும்போது அமைதியாகவே சென்றுவிட்டது. எவ்விடத்திலிருந்து வந்ததோ அவ்விடத்திற்கே போய்விட்டது. அந்த ஆன்மாவிற்கு அருணாசல அருட்தந்தையே நல்லருள் பாலித்து நற்கதியருள வேண்டுகின்றேன்.
“அந்நியம்
இல் அன்பு செய்யும் அயலவனும் அன்பன்”
என்.கே.எஸ். கிருஷ்ணபிள்ளை
பண்டகை,
உடுப்பிட்டி.
Comments
Post a Comment