Skip to main content

நன்றி நவிலல்

அமரர் ஸ்ரீமான் வயிரவிப்பிள்ளை சிவச்ச்திரதேவன் அவர்கள் இறைபதம் அடைந்த வேளை ஆறுதலளித்து, எம்மோடு துணை நின்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் அனை வருக்கும் மற்றும் நாட்டுச் சூழ்நிலை காரணமாக நேரடியாக வரமுடியாமல் தொலைபேசி மூலம், சமூக வலைத்தளங்கள் மூலம், பத்திரிகைகள் மூலம் செய்திகளைப் பகிர்ந்தவர்கள், கண்ணீர் அஞ்சலிமூலம் ஆறுதல் அனுதாபங்களைப் பகிர்ந்தவர்கள் மற்றும் இறுதிக் கிரியைகளில் அனைத்து உதவிகளையும் வழங்கிய அன்பர் களுக்கும் கிரியையினைச் சிறப்பாக நடாத்திய சிவாச்சாரியாருக்கும் உணவு, நேநீர் போன்றவை வழங்கிய அன்பர்களுக்கும், அந்தியெட்டி, வீட்டுக் கிரியைகளில் பங்குபற்றி சிறப்பித்தவர்களுக்கும் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்தோருக்கும் முதல் நன்றிகள்.

இந்த நூலை ஓர் ஆவணப் பெட்டகமாக மிக குறுகிய காலத்திற்குள் தொகுப்பதற்கு தங்கள் தங்கள் அனுபவ உணர்வுகளை ஆக்கங்களாக ஆக்கித் தந்த பெருந்தகைகளுக்கும் இவ்வாக்கங்களை எமக்கு உரிய நேரத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க உதவிய நல் உள்ளம் கொண்டவர்களுக்கும் இதை அச்சிட்டு நூல் வடிவாக்க உதவிய குமரன் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்.

மேலும் இந் நூலுக்கான உணர்வுப் பகிர்வுகளை பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அமரரின் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டிய ஆனால் சொல்லத் தவறிய யாராவது இருப்பின் அவர்களுக்கும் எங்கள் மன்னிப்புக் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவு அடைகின்றோம்.


இங்ஙனம்,

குடும்பத்தினர்


இல.5-3/6, பிரான்சிஸ் வீதி,

கொழும்பு-06.


இலக்ஷிமி பவனம்,

பழைய விதானை வளவு,

பண்டகை, உடுப்பிட்டி.

Comments