Skip to main content

நான் அறிந்த சிவச்சந்திரதேவன் ஐயா! - Dr. அ.துஷ்யந்தன்

ஓய்வுபெற்ற அரச வங்கி அதிகாரி சிவச்சந்திரதேவன் அவர்கள் தனது ஆளுமையாலும் சேவை மனப்பான்மையாலும் பல்வேறு ஆக்கபூர்வ செயல்களில் ஈடுபட்டு எல்லோரது நன்மதிப்பையும் பெற்றவராவார். இவருடைய சிறந்த ஆளுமையின் மூலமே ஏறக்குறைய 30 வருடங்களாக வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் வெற்றிகரமாக இயங்கி வந்தது.

நேர்மையான, சுயகட்டுப்பாடு நிறைந்த இவரது வாழ்வு மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கின்றது. இவர் ஓர் அரச வங்கி அதிகாரியாக இருந்ததோடு, தனது மனதுக்கு நிறைவுதரும் சேவையை இளைஞர் யுவதிகளுக்குத் தனது ஓய்வு நேரத்தில் செய்துகொடுத்திருக்கின்றார். இளைஞர் யுவதிகள் பலருக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற பல்வேறு விதங்களில் உதவி, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியுள்ளார்.

மேலும், இவர் தமிழ்ப் பற்றும் சமய உணர்வும் உடையவர். தமிழ் இலக்கிய விழாக்கள், பட்டிமன்றங்கள், கலைவிழாக்களில் எப்போதும் இவரைக் காணமுடியும். இவரை இவரின் குடும்பத்தின ருடன் கோவில் திருவிழாக்களில் காணமுடியும். இவரின் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுக்கு வேட்டி அணிவித்து கோவிலுக்கு சமய ஆசாரத்துடன் வருகின்ற காட்சி இன்றும் என் கண்முன்னே நிற்கின்றது.

எந்த விடயத்தையும் கரிசனையுடன் ஆராய்ந்து பேசும் ஆற்றல் இவருக்கே உரியது. இவ்வாறான நற்பண்புகளாலும் திறமையாலும் இன்னும் பல்வேறு விடயங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத் துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தவர். எனினும் இறைவனின் விதியின் பிரகாரம் எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவர் என்றும் மனைவி, பிள்ளைகளுடன் துணைநின்று வழிகாட்டுவார் பிள்ளைகளின் வெற்றிகளை நிச்சயம் பார்த்து மகிழ்வார்

Dr. .துஷ்யந்தன், (உடுப்பிட்டி)
போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு


Comments